எதிரணியை இப்படி பண்ணிட்டீங்களே கோலி.., போன வருட சம்பவத்தை சுட்டிக்காட்டிய பாக்.., முன்னாள் கேப்டன்!!

0
எதிரணியை இப்படி பண்ணிட்டீங்களே கோலி.., போன வருட சம்பவத்தை சுட்டிக்காட்டிய பாக்.., முன்னாள் கேப்டன்!!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பெண்மணி சனா மிர் பாராட்டு தெரிவித்தார்.

விராட் கோலி

T20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை பார்க்க தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். ஏனென்றால் கடந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வி அடைந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை, சனா மிர் என்ற பெண்மணி பாராட்டியுள்ளார். இவர் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த T20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் தான் விராட் கோலி.

முட்டிக் கொள்ளும் மூன்று நாடுகள்.., இந்திய அணிக்கு வெற்றி கைகூடுமா?? இன்று அரங்கேறும் கால்பந்து போட்டி!!

image.png

அப்போது இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஆனால் போட்டியில் தோல்வி அடைந்தாலும் விராட் கோலி பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஷ்வானை பாராட்டினார். ஒரு எதிரணி வீரர் இவ்வாறு எங்கள் நாட்டு வீரரை பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என கடந்த ஆண்டு நடந்த நிகழ்வை இப்போது நினைவு படுத்தி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here