பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்த தீபிகா இந்த சீரியலை விட்டு விலகுவதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார். இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.
விஜே தீபிகா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் தீபிகா. இவர் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவருக்கும் கண்ணனுக்கும் கெமிஸ்ட்ரி ஒத்துபோகவே இருவரும் நல்ல வரவேற்பை பெற்றனர். கண்ணன் ஐஸ்வர்யாவின் காட்சிகள் வந்தாலே மக்கள் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இப்படி இருக்க தற்போது தீபிகாவை இந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலக்கியுள்ளனர். அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று அனைவரும் கேட்டு வந்த நிலையில் தீபிகாவே பதிலளித்துள்ளார். அதாவது இந்த சீரியலுக்கு வந்ததற்கு பிறகு தான் அவரது முகத்தில் அலர்ஜி வர ஆரம்பித்ததாம்.
அதனை போக்க 3 மாதங்கள் வரை டைம் கொடுத்தார்களாம். ஆனால் மேக்கப் போட போட அவருக்கு அலர்ஜி அதிகமாகி கொண்டே தான் சென்றதாம். அதனால் தான் இந்த சீரியலை விட்டு விலக்கி விட்டார்களாம். ஆனாலும் அவர்கள் மேல் தவறு கிடையாது. எனக்கு நிறைய டைம் கொடுத்தார்கள் என்னால் சரி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் காயத்ரியை பற்றி தெரியுமா?? என்று அவரிடம் கேட்க அவரை பற்றி சுத்தமாக தீபிகாவிற்கு தெரியாதாம். மேலும் அவர் நன்றாக நடித்து விட்டால் என்னை தப்பா பேசிடுவாங்களோனு பயமா இருக்கு என்றும் தீபிகா கூறியுள்ளார்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்