விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம் – அதுவும் இந்த சீரியலிலா??

0

தொடக்க காலத்தில் சன் டிவியில் இருந்த பிரபல தொகுப்பாளர் தீபக் தற்போது ஜீ தமிழ் சேனனில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவிக்கு தாவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபக்:

பல வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் தான் தென்றல். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் தீபக். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த தீபக் சில வருடங்களுக்கு சினிமா மற்றும் தொலைகாட்சியில் இருந்து காணாமல் போகிவிட்ட்டார். பின்பு பல வருடங்கள் கழித்து ஜீ தொலைக்காட்சி மூலம் தன் கம்பேக்கினை கொடுத்தார்.

ஜீ தொலைகாட்சியில் பிரபல முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வந்தார் தீபக். மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார் இருந்தும் அவர் எதிர்பார்த்த வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜீ தொலைகாட்சியில் இருந்து அவர் விஜய் டிவிக்கு தாவியுள்ளாராம்.விஜய் டிவியில் விரைவில் தமிழும் சரஸ்வதியும் என்னும் சீரியல் வரவுள்ளதாம்.

இந்த சீரியலில் கதாநாயகனாக தீபக் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 11 வருடங்களுக்கு பின்பு தீபக் மீண்டும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். பொதுவாக விஜய் டிவிக்கு வந்தாலே அனைவரும் மக்களிடம் பேமஸாகிவிடுவர். அதேபோல் இனி தீபக்கும் செம பேமஸாகி விடுவார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here