கவிப்பேரரசு” என்று திரைத்துறையினரால் அழைக்கப்படும் பாடலாசிரியர் வைரமுத்து இளம்பெண் ஒருவரிடம் அவரது உதடு அழகாக இருந்ததாகவும், அதனை தொட வேண்டும் என்று கூறியதாகவும் பாடகி சின்மயி பாலியல் புகார் ஒன்றினை தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மற்றும் சின்மயி சர்ச்சை
கடந்த சில ஆண்டுகளாகவே பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட அவர் கேரளா அரசு வைரமுத்துவுக்கு வழங்க இருந்த ஒரு விருதினை வழங்க கூடாது என்று போர்க்கொடி தூக்கினார். இதனை அடுத்து பலர் சின்மயிக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனையால் வைரமுத்து தனக்கு அந்த விருது வேண்டாம் என்று தெரிவித்து விட்டார்.
இந்த சூழலில் சின்மயி மீண்டும் அவர் மீது ஒரு பாலியல் புகாரினை முன்வைத்துள்ளார். இளம்பெண் தனது ஒரு பதிவினை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அதில் இளம்பெண் ஒருவர் வைரமுத்துவினை பார்க்க சென்றுள்ளார். அப்போது வைரமுத்து அவர்க்கு சாப்பிட ஏதுனும் வேண்டுமா? என்று கேட்டுள்ளார். ஆனால், வைரமுத்துவோ இங்கு மோர் நன்றாக இருக்கும் என்றும் அதனை அருந்த கூறியுள்ளார். சரி என்று அந்த இளம்பெண்ணும் சம்மதிக்க அவர் தனக்கு வழங்கப்பட்ட மோரை குடித்துள்ளார்.
பின், வைரமுத்து அந்த பெண்ணை பார்த்து ‘கிளாஸ் தொட்ட அந்த உதடுகளை நான் தொட விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். அதே போல் மோர் குடிக்கும் போது அவரது உதடுகள் அழகாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் இடத்தினை விட்டு விலகி விட்டாராம். அதற்கு பின்பாக பல வழிகளில் வைரமுத்து தன்னை அடைய முயற்சித்துள்ளார் என்றும் அந்த பெண் சின்மயியிடம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி காட்டுத்தீயாய் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.