தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது டிசம்பர் 20ஆம் தேதி(புதன்கிழமை) காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் அன்று ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ரயில் பயணிகளே., குழந்தைகளுக்கான முன்பதிவில் புதிய விதிமுறை? முழு விவரம் உள்ளே…