இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா துவக்க பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். போட்டிகளில் பங்கேற்பதற்காக 100 சதவீதம் தான் தயாரானதும் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள்:
கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பியது. கடந்த 27 ஆம் தேதி முதல் இந்த இரு அணிகளுக்கும் போட்டிகள் நடைபெற்றது. முதல் ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அபாரமாக விளையாடி ஜெயித்தனர். பின், ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி அடைந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், இரு அணிகளுக்கும் டி 20 போட்டிகளை நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்திய அணியின் வீரர்களான தவான், கேஎல் ராகுல், விராட் ஹோலி, நடராஜன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அருமையாக விளையாடினர். இதன் காரணமாக முதல் இரண்டு நாட்கள் நடந்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. எனினும், இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி அடைந்ததால் கோப்பையினை தட்டி சென்றது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் – ஹர்திக் பாண்ட்யா விலகல்!!
தற்போது அடுத்த போட்டிகள் வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். அதே போல் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னரும் விலகியதாக அறிவித்துள்ளார். கடந்த போட்டிகளிலும் அவர் தனது காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவர் இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, “எனது காயம் குணமடைந்து விட்டதாக தான் உணருகிறேன். ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் ரன்களை எடுக்க வேகமாக ஓட வேண்டும். அதே போல் சுறுசுறுப்பாகவும் விளையாட வேண்டும். 100 சதவீதம் தயார் என்ற நிலையில் தான் நான் போட்டிகளில் விளையாடுவேன். விரைவில் தயாராவேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.