அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரித்து வருகிறது. இதில், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில், ஒடிசா மாநில அரசு அடுத்து அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தன.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, 42% மாக இருந்த அகவிலைப்படியை 4% அதிகரித்து 46% மாக மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகள் அறிவித்தன. இதனை தொடர்ந்து, உத்திரப்பிரதேச அரசும் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அகவிலைப்படியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போக, அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ. 7000 வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பள்ளி மாணவர்களே…, தீபாவளிக்கு எத்தனை நாட்கள் லீவு தெரியுமா?? வெளியான முக்கிய தகவல்!!