இந்தியா முழுவதும் தற்போது பண்டிகை காலம் தொடங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை காலத்தின் நவராத்திரி பெரு விழா இன்றுடன் (அக்டோபர் 24) முடிவடைய உள்ளது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
தற்போது இதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிய தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகைகாக நவம்பர் 11 முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை என 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாபெரும் சாதனையை படைத்த தனியார் பள்ளிகள்…, ஒரே வருடத்தில் இப்படி ஒரு மாற்றமா??