அகவிலைப்படி முடக்கம் நீக்கம்? அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு லாட்டரி!!

0

அரசு சார்பில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த முடக்கம் வருகிற ஜூலை மாதம் முதல் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி:

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாட்டின் நிதி நிலைமை கடுமையாக பாதித்தது. நாட்டின் மிக கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்று தான் அகவிலைப்படி முடக்கம். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டு தோறும் அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும். நிதி பற்றாக்குறை காரணமாக இதனை முடக்கம் செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நாட்டில் தற்போது அனைத்து தொழில் துறைகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருவதால் முடக்கம் செய்யப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அகவிலைப்படியை வருகிற ஜூலை மாதம் முதல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது 28% அகவிலைப்படி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? முதல்வர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!!

காரணம் 2020 ஜனவரி 4%, 2020 ஜூன் 3%, 2021 ஜனவரி 4%, மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 17% அகவிலைப்படி, மொத்தமாக 28% அகவிலைப்படி ஊதியம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது. தற்போது இந்த அகவிலைப்படி முடக்கம் நீக்கத்தினால் சுமார் 52 லட்ச அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்ச ஓய்வூதியதாரர்கள் பயனடையவுள்ளனர். மேலும் அரசு ஊழியர்களுக்கான DA அதிகரிக்கும் பொழுது ஓய்வூதியதரர்களுக்கான DRம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தகவலினார் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here