ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தற்போது தனது கனவு XI அணியை அறிவித்துள்ளார். அதில் இந்திய அணி சார்பில் ஒருவர் மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங்:
மக்கள் அனைவராலும் மிக அதிகமாக கவரப்படும் விளையாட்டு போட்டி என்றால் அது கிரிக்கெட் போட்டி தான். இதனை மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கொண்டாடி ரசித்து வருவார்கள். மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் அவ்வப்போது தங்களது ட்ரீம் டீமை அறிவித்து வருவார்கள். இதனை ரசிகர்கள் அனைவரும் தக்க ஆர்வத்துடன் பார்த்து வருவார்கள். எந்த நாட்டு வீரர் தனது ட்ரீம் டீமை அறிவிக்கிறாரோ, அந்த அணியில் அவர்கள் நாட்டு வீரர்களே அதிகமான அளவில் இடம்பெறுவார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏலத்தில் டிமாண்டை ஏற்படுத்திய தமிழக வீரர் – அசத்துவாரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தற்போது அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது ட்ரீம் டீமை அறிவித்துள்ளார். இதில் ஒரு இந்திய அணி வீரர் மட்டுமே இடம்பிடித்துள்ளார். இந்திய அணி சார்பில் சச்சின் மட்டுமே இடம்பிடித்துள்ளார். மேலும் அவரது கனவு அணியில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை போன்ற அணியினர் இதில் இடம்பிடித்துள்ளனர். மேலும் அந்த அணியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 5 பேர் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கி பாண்டிங் ட்ரீம் டீம்:
லாங்கர், ஹைடன், காலிஸ், சச்சின் டெண்டுல்கர், லாரா, சங்ககாரா(C), கில்க்ரிஸ்ட்(WC), வார்ன், அக்ரம், அம்புரோஸ், மெக்ரோ.