அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்து வருகின்றனர். இப்படியாக அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும் பட்சத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் ஊதிய உயர்வு இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அடுத்து ஜூன் 30ஆம் தேதி தான் ஸ்கூல்., அதிகாரபூர்வ அறிவிப்பு!!!
அதாவது அகவிலைப்படி 25 சதவீதம் எட்டிய போது ஊழியர்களின் ஹவுஸ் ரெண்ட் அல்லோவன்ஸ் (HRA) 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக HRA 27 சதவீதம் வாங்குபவர்களுக்கு 30%ஆகவும், 18% வாங்குபவர்களுக்கு 20 ஆகவும், 9% HRA வாங்குபவர்களுக்கு 10%மாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.