CWC ஷோவில் ரத்தம் சிந்திய நடுவர் செஃப் வெங்கடேஷ் பட்., அவரே சொன்ன ஷாக்கிங் உண்மைகள்!!

0
CWC ஷோவில் ரத்தம் சிந்திய நடுவர் செஃப் வெங்கடேஷ் பட்., அவரே சொன்ன ஷாப்பிங் உண்மைகள்!!
CWC ஷோவில் ரத்தம் சிந்திய நடுவர் செஃப் வெங்கடேஷ் பட்., அவரே சொன்ன ஷாப்பிங் உண்மைகள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக உள்ள செஃப் வெங்கடேஷ் பட், கடந்த சீசனில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

செஃப் வெங்கடேஷ் பட் :

விஜய் டிவி நம்பர் ஒன் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோவில், கடந்த மூன்று சீசன்களோடு சேர்த்து, தற்போதைய 4ம் சீசன் வரை நடுவராக தொடர்ந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் கோமாளிகளுடன் சேர்ந்து அடிக்கும், அட்டகாசத்தை பார்த்த பலரும் நீங்கதான் ரியல் கோமாளி என, இவரை மனதார வாழ்த்தி வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் கடந்த சீசனில், ஊஞ்சல் டாஸ்க் நடந்தபோது பரத் மற்றும் குரேஷி இருவரும் சேர்ந்து ஊஞ்சல் ஆட்டும் போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் பட் விழுந்து விடுவார். அனைவரும் ஓடி வந்து தூக்குவார்கள். அந்தக் காட்சி அப்படியே காமெடியாக நிறைவு பெற்று விட்டது. இது குறித்து பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் பட் பேசிய போது, அந்த சம்பவத்துல எனக்கு கால்ல அடிபட்டுருச்சி.

பேண்ட் குள்ள லைட்டா கீறல் விழுந்து ரத்தம் வந்துச்சு, ஆனால் பெரிய அடி எதுவும் படவில்லை என தெரிவித்தார். உடனே கூட இருந்த மணிமேகலை மற்றும் பரத், என்ன சார் சொல்றீங்க இதெல்லாம் எங்களுக்கு சத்தியமா தெரியாதே? என ஷாக் ஆகினர். அந்த டைம் கேமரா போய்க்கொண்டிருந்ததால் நான் நடிக்க வேண்டி இருந்தது. மத்தபடி உண்மையாவே எனக்கு அந்த சீன்ல அடிபட்டுடுச்சு என உருக்கத்துடன் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here