மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பை மேற்கொள்ள CUETதேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதிக்குள் நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் பல மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
இதனால் மாணவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது CUET நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அதை மீண்டும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இன்னும் விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தமிழகத்தில் நாளை இந்த அட்டவணையில் தான் மின்சார ரயில்கள் இயங்கும்…, வெளியான அறிவிப்பு!!