தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடு, கோழி ஆகியவற்றின் தீவன பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் நாமக்கல், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கறிக்கோழி உற்பத்தி பண்ணைகளில் கொள்முதல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 11 ரூபாய் கொள்முதல் விலை உயர்ந்து 125 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) தெரிவித்துள்ளனர்.
தெறிக்கவிட போகும் அஜித்தின் GOOD BAD UGLY படம்.., வெளியான முக்கிய அப்டேட்!!
மேலும் கோடை வெயில் காரணமாக கோழிகள் தீனி உட்கொள்வதையும், தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்து வருவதால் 30 சதவீதம் கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இனி வரும் நாட்களில், கூடுதலாக விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.