வரும் மார்ச் 20, 2020 முதல் டெபிட் கார்ட் மற்றும் க்ரெடிட் கார்ட் போன்றவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க ஆர்பிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி டெபிட் மற்றும் க்ரெடிட் கார்ட்களில் எந்த மாதிரியான சேவைகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்த வேண்டாம், எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை எல்லாம், கார்ட் உரிமையாளர்களே தீர்மானிக்க வசதி செய்யப்படவுள்ளது.
வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்
இணைய வழி திருட்டு
ஏடிஎம், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் ஆன்லைன் திருட்டு சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடி சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது.
டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்
எம்மாதிரியான மாற்றங்கள்
டெபிட் கார்டு வைத்திருப்பவர் வ்வளவு பணத்தை தன் கார்டில் இருந்து பயன்படுத்த முடியும், பணப் பரிமாற்றத்தை உள்நாட்டில் மட்டும் செய்யலாமா அல்லது வெளிநாட்டிலும் செய்யலாமா, பி ஓ எஸ் இயந்திரங்கள் மற்றும் ஏ டி எம் இயந்திரங்களில் பயன்படுத்துவது (கார்ட் கொடுக்கும் போதே வசதி இருக்கும்), ஆன்லைன் பணப் பரிமாற்றங்களுக்கு தன் கார்டை பயன்படுத்தலாமா என்பதை எல்லாம் அவரே தீர்மானிக்க முடியும்.
யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்
இந்த புதிய விதிகள் வரும் 16 மார்ச் 2020 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த புதிய விதிமுறைகளை, இனி கொடுக்க இருக்கும் புதிய கார்ட்கள் மட்டுமின்றி, Re-issue கார்ட்களுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |