சமீப காலமாக பல்வேறு வங்கி நிறுவனங்களும், தங்களது கிரெடிட் கார்டு திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் 2024 மே 1ஆம் தேதி முதல் யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி யெஸ் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.15,000க்கு மேல் யூட்டிலிட்டி பில் செலுத்தினால் 1% சர்சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். இது யெஸ் பேங்க் இன் பிரைவேட் கிரெடிட் கார்டுக்கு பொருந்தாது. அதேபோல் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ. 20,000க்கு மேல் யூட்டிலிட்டி பில் பேமெண்ட் செலுத்தினால் 1% மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு.., நீரிழிவு நோய் தான் இதற்கு காரணமா??