தமிழகத்தில் தற்போது காய்கறிகள் மட்டுமல்லாமல் மல்லிகை பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மலை ஏற கட்டுப்பாடு., பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!!
அதாவது இனி வரும் நாட்களில் 200 ML ஆவின் பால் பாக்கெட்டுக்கு ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி ஒரு லிட்டர் ஆவின் பால் தற்போது ரூ.2.50 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை ஆரஞ்சு நிற பாக்கெட்களில் வரும் 200ML ஆவின் பால் இனிவரும் நாட்களில் வயலட் நிற பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.