இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் சற்றே குறையத் துவங்கியுள்ளது. அந்த வகையில், தினசரி 10 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பரவல் தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது. தமிழகத்திலும் தினசரி பதிவு செய்யப்படும் புதிய பாதிப்புகள் வெகுவாக குறைந்திருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், கொரோனவால் பாதிக்கப்பட்டு சுமார் 2,279 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும், ஒரே நாளில் 469 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கோடிக்கு விற்பனையான சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம்….,ஆட்டம் இனி வேற மாதிரி…,
மேலும், நீண்ட நாட்கள் கழித்து இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த சூழலில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவும், முகக்கவசங்களை அணியவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.