தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை சிபிஐ க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதிகரிக்கும் முறைகேடுகள்..!
தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து குரூப் 2a, போலீஸ் தேர்வுகள் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன.
எனவே இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை மார்ச் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |