இன்றுடன் ஓய்வுபெறும் மருத்துவ ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

0

இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி அறிக்கை..!

இதையடுத்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் இன்றுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மார்ச் 31-ந் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டித்து தற்காலிக பணி ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here