கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களையும் வீட்டுக்குளே முடங்க வைத்தது. அந்த வகையில் இந்தியாவில் 2 ஆண்டுகள் ஊரடங்கு, முகக்கவசம், தடுப்பூசி போன்ற நடவடிக்கையால் 2022ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் காரணமாக பல்வேறு தடைகளும் தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனா நோயால் தினந்தோறும் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இருந்தாலும் மத்திய சுகாதாரத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 1,500க்குள் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?? வெளியான முக்கிய தகவல்!!
அதன்படி உலகம் முழுவதும் இதுவரை 68.80 கோடி பேர் பாதிக்கப்பட்டதில் 68.72 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் 39,056 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.