டெல்லி அணியை வென்ற CSK, ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு அணியும் படைக்காத, தனித்துவ சாதனை ஒன்றை படைத்துள்ளது.
CSK:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணியை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த CSK அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்திருந்தது. இதனை தொடர்ந்து, களமிறங்கிய டெல்லி அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், தனித்துவமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது, ஐபிஎல் வரலாற்றில், எந்த ஒரு விரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல், வெற்றியை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையை CSK அணி தட்டி சென்றுள்ளது. அதாவது, டெல்லி அணிக்கு எதிராக, CSKயின் சிவம் துபே 25, ருதுராஜ் கெய்க்வாட் 24, அம்பதி ராயுடு 23, அஜிங்க்யா ரஹானே 21, ஜடேஜா 21 மற்றும் தோனி 20 ரன்கள் எடுத்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளனர்.
ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா…, சஞ்சு சாம்சன் படை அதற்கு வழி வகுக்குமா??
மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரை 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தோனி 10 சிக்ஸர் உட்பட 96 ரன்களுடன் 204.25 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து அசாதாரண சாதனையும் படைத்துள்ளார். இது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள், என்பதை விட எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதை முக்கியம் என தோனியை புகழ்ந்துள்ளார்.