இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா:
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவல் அச்சம் காரணமாக கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதே போல் மக்கள் அனைவரும் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து கொரோனா பரவல் இந்தியாவில் குறைய ஆரம்பித்தது. இப்படியான நிலையில் இங்கிலாந்தில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்தது. ஆய்வு செய்து பார்த்ததில், புதிய வகை மாற்றங்களுடன் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த உருமாற்றம் அடைந்த புதிய வைரசால் இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து இந்திய உட்பட 48 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தன. அதே போல் சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து சேர்ந்த அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் விமான நிலையங்களில் பரிசோதனை செய்து பார்த்ததில் தற்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை!!
சென்னையை சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனாவாக இருக்குமோ? என்று சந்தேகம் அடைந்து வரும் நிலையில் தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஒருவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.