‘சூர்யா அளவிற்காவது, விஜய் குரல் கொடுக்கட்டும்’ – சீமான் ஆவேச பேட்டி!!

0

சூர்யா தன் கருத்தை வெளிப்படுத்துவது போல் விஜய் முதலில் தனது கருத்தை வெளிப்படுத்தட்டும், அதன் பிறகு அரசிலுக்கு வரலாம் என்று ஆவேசமாக பேட்டியளித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான் ஆவேச பேட்டி:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அரசியல் களமே சூடுபிடித்து வருகிறது. ஒருபக்கம் என்னவென்றால் ரஜினி மற்றும் கமல் அரசியிலில் இறங்கியது, மறுபக்கம் ஏற்கனவே இருக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி. எனவே அடுத்த ஆண்டு தேர்தல் முடிவதற்குள் பல பரபரப்பு தகவல்கள் தினமும் வந்து கொண்டே தான் இருக்கும். தற்போது அதே போல் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், தற்போது அரசியலில் இறங்கியிருக்கும் ரஜினி மற்றும் கமலுக்கு விழப்போகும் அடியை பார்த்து அரசியலுக்கு பிற நடிகர்கள் வர யோசிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தைப்பொங்கலுக்கு ‘வாத்தி கம்மிங்’ – மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ்!!

இவர் கூறியது தற்போது பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. இதனால் விஜயின் ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். மேலும் சீமானுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். அவர் கூறிய கருத்திற்கு சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறியதாவது, விஜய் ரசிகர்கள் கோவப்படுவதினால் எந்த பலனும் இல்லை, தனது தகுதியை வளர்த்து கொண்டு மக்களுக்காக போராட தயாராக இருந்தால் விஜய் அரசியலுக்கு வரலாம், முதலில் விஜய் சூர்யாவை போல தனது கருத்தை வெளிப்படுத்தட்டும். அதன்பிறகு அரசியலில் இறங்கட்டும்” என்று ஆவேசமாக கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களின் கோபத்தை மேலும் தூண்டும் வண்ணமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here