தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி..!

0

தமிழகத்தில் இன்று நாளில் 110 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்து உள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு உறுதி..!

டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்குபெற்று தமிழகம் திரும்பிய 190 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு சென்று வந்த பலரின் விபரங்கள் தெரியாததால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தற்போது மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேர் கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக விபரம்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 மாவட்டங்களை சேர்ந்த 110 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  • நெல்லை – 6
  • கோவை – 28
  • தேனி – 20
  • திண்டுக்கல் – 17
  • மதுரை – 9
  • திருப்பத்தூர் – 7
  • செங்கல்பட்டு – 7
  • நெல்லை – 6
  • சிவகங்கை – 5
  • காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் ஈரோட்டில் தலா இருவருக்கும்,
  • சென்னை, கரூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 77,300 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 81 பேர் அரசு முகாம்களிலும் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here