தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் மீண்டும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் போன்ற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9) மட்டும் நாடு முழுவதும் சுமார் 5,357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர், பெட் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை சுமார் 32,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு உயிரிழப்புகளும் தினசரி உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.