கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
உயிர்கொல்லி கொரோனா..!
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/2-1.jpg)
கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா..!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் அறிகுறியுடன்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவடட்ங்களில் 22 ஆயிரத்து 364 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2020/03/t1-1024x639.jpg)
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |