மனிதர்களை தொடர்ந்து விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி…!கால்நடை துறை மருத்துவர்கள் அதிரடி!!!

0

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கியது  கொரோனா என்னும் கொல்லுயிரி. இந்நிலையில் இந்த தொற்றில் இருந்து மனிதர்களை  காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே பேராயுதமாக விளங்குகிறது. அதேபோன்று விலங்குகளையும் காப்பாற்ற அமெரிக்காவில் விலங்குகளுக்கான தடுப்பூசியை அந்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது.

கொரோனா என்னும் பெருந்தொற்று  முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என தனது வீரியத்தை குறைக்காமல் மனிதர்களை தாக்கி பல உயிர்களை பலி வாங்கி உள்ளது. மேலும் சிலர் அதன் பிடியில் ஆட்கொண்டு மீள முடியாமல் உள்ளனர். இந்த தொற்றில் இருந்து மக்களை காக்க அனைத்து தரப்பினரும் மற்றும் மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசியை பேராயுதமாக விளங்குவதாக தெரிவித்து உள்ளனர். அதன் அடிப்படையில் மக்கள்  கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுட் போன்ற தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து ஸ்பூட்னிக்-வி என்ற மூன்றாவது தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு  வருகிறது.

இந்நிலையில் இந்த கொடிய தொற்றில் இருந்து மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் காப்பாற்ற அமெரிக்க கால்நடை துறை மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன் படி அந்நாட்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசி முதற்கட்டமாக கலிஃபோர்னியாவில் இருக்கும் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கம், கரடி, புலி போன்ற விலங்குகளுக்கு செலுத்தப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here