கடும் பாதிப்புகளுக்கு பிறகு இந்தியா தற்போது தான் படிப்படியாக கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருகிறது. இந்தியாவில் இந்த இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிரா. தற்போது மகாராஷ்டிரா நிபுணர் குழு கொரோனா மூன்றாம் அலை பற்றிய அதிர்ச்சிகர தகவலை விடுத்துள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்புகள் இந்தியாவில் குறைந்துவருவதை தொடர்ந்து, மூன்றாம் அலை பாதிப்பு குறித்த கவலைகள் அனைவரின் மனதிலும் இருக்கிறது. தற்போது வரை குழந்தைகளை பெரிதும் பாதிக்காத இந்த கொரோனா, மூன்றாம் அலைகளின் போது குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் மூன்றாம் அலை பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
சமீபத்தில் மகாராஷ்டிரா முதலவர் உத்தவ்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மருத்துவ கட்டுப்பாட்டு குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் மகாராஷ்டிரா நிபுணர் குழு தெரிவித்ததாவது, “இன்னும் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் கொரோனா மூன்றாம் அலை மகாராஷ்டிராவில் ஏற்படும். இரண்டாம் அலையை விட, இரண்டு மடங்கிற்கும் அதிகமானோர் மூன்றாம் அலையில் தாக்கப்படுவார்கள்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்பை விட தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து அதிகரிப்பட்டு வருவதால், நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்து, மூன்றாம் அலை பாதிப்புகள் அதிக அளவில் இருக்காது என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்