நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா 3ம் அலை தொடரும் எனவும் அது குறித்து எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வல்லுநர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
3ம் அலை:
2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று தற்போது முதல் அலை இரண்டாம் அலை என தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்துகொண்டே உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.தற்போது கொரோனா 3ம் அலை பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எனவே அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 185 க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.