ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அந்த சீரியலில் புது நபர் சேர போகிறார் என்று இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
செம்பருத்தி சீரியலில் களமிறங்கும் புது முகம்:
சீரியல்கள் தமிழ் மக்கள் மனதில் மிகவும் நெருக்கமாகியிருக்கின்றன. ஃபன், நகைச்சுவை, சிலிர்ப்பு, காதல், சூழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை என ஒரு பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. அந்த வகையில் ஜீ தமிழில் ஹிட் சீரியல் என்ற சொல்லக் கூடிய லிஸ்டில் செம்பருத்தி சீரியல் முதல் இடத்தில் உள்ளது.
தற்போது சீரியலில், பார்வதிக்கு அருண் மற்றும் ஐஸ்வர்யா நன்றி கூறுகின்றனர். அதன் பின் பவானியை மறைத்து வைத்தது யாரு என கேட்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் அம்மா கங்கா தான் இந்த மோசமான செயலை செய்தார் என சொல்லாமல் மறைகிறார் பார்வதி.
அதன்பின்னர், அகிலா அனைவர் முன்பும் தன்னை அவமானப்படுத்தியது பற்றி கடும் கோபத்துடன் பேசுகிறார் ராஜேஸ்வரி. இப்படி வில்லத்தனமாக போயிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில், இப்போது காமெடி நடிகர் அழகப்பன் மீண்டும் களம் இறங்க உள்ளார். சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!