25,000க்கும் கீழ் குறைந்தது கொரோனா – கொண்டாட்டத்தில் மக்கள்!!!

0

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

25,000க்கும் கீழ் குறைந்தது கொரோனா:

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது அது உண்மையாகும் பொருட்டு; இன்று  24,405 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தொடர்ந்து ஆறாவது நாளாக, கோவிட் -19 தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை, சிகிச்சையிலிருந்து வெளியேற்றப்படும்  வழக்குகளின் தினசரி எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. நேற்று  32,221 கோவிட் -19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர், அதன் படி இப்போது உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை 2,80,426 ஆக உள்ளது.

அதேபோல கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,66,660 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 நேரத்தில் மட்டும் 1,79,438 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 2,81,96,279 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here