கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 500 ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. 44,658 பேருக்கு புதிதாக தொற்று!!

0
இந்தியாவில் உருவெடுத்த புதிய வகை கொரோனா வைரஸ் - உலக சுகாதார மையம் பகிர் அறிவிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு கூடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 496 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஜூலை மாத இறுதியில் வெகுவாக குறைய தொடங்கியது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது தொற்று எண்ணிக்கை 40,000 ஐ தாண்டி பதிவாகி வருகிறது.

இது மூன்றாம் அலை தொடங்கி விட்டதா என்ற பயத்தை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. ஏனெனில் செப்டம்பர்  இறுதியில் கொரோனா மூன்றாம் அலை உச்சம் தொடும் என்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய கொரோனா விவரங்களை சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

கேரளாவில் இன்றைய கொரோனா நிலவரம்

அதன்படி, நேற்று மட்டும் புதிதாக 44,658 பேர் கொரோனவால் பாதித்துள்ளனர். எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,03,188 ஆக உயர்ந்தது. மேலும் 496 பேர் இறந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,36,861 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 32,988 பேர் குணமடைந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here