இந்தியாவில் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனோ பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் முன்கூட்டியே சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒருவருக்கு ஜேஎன்1 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கேரள மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ISL 2023: அந்நிய மண்ணில் அசத்திய ஜாம்ஷெட்பூர்…, ஐதராபாத் அணிக்கு எதிராக கோல் மழை!!