இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (டிசம்பர் 21) நடைபெற்ற லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியல், 2வது மற்றும் 20 வது நிமிடங்களில் கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து 2வது பாதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில், ஜாம்ஷெட்பூர் வீரர்கள் ஷில்லாங் லாஜோங், டேனியல் முறையை 70வது மற்றும் 79வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர். இதற்கிடையில் ஐதராபாத் அணியின் ஜொனாதன் மோயா 74வது நிமிடத்தில் சுய கோல் அடித்தார். இதன் மூலம் ஜாம்ஷெட்பூர் அணியானது, 5-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுது.