தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த நவ. 19ஆம் தேதி நடத்தப்பட்டது. 10 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 9,352 தேர்வர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து இருந்தனர். இதற்கான முடிவுகள் நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த கட்ட தேர்வு குறித்து அறிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓட்டுநர் செயல்முறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்காக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்படி சென்னை குரோம்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் திருச்சி சாலை போக்குவரத்து நிறுவனங்களில் செயல்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.., 3 பேர் உயிரிழந்த சோகம்.., வெளியான தகவல்!!!