கொரோனா பெருந்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 18.58 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.17 லட்சம் ஆக பதிவாகியுள்ளது.
பல உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் இன்னும் போக்கு காட்டி வருகிறது. வல்லரசு நாடுகளில் கூட கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்றே சொல்லலாம். ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் வரிசையாக அடுத்த கொரோனா தொற்று அலை தாக்குகிறது.
இவ்வாறு அடுத்தடுத்து அலையாக தொற்று பரவல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வைரஸ் உருமாற்றம் ஆகும். நம் இந்தியாவில் கூட கொரோனா இரண்டாம் அலை, உருமாறிய டெல்டா ரக கொரோனாவால் ஏற்பட்டது என நிபுணர்கள் கூறினர். இந்த டெல்டா ரக கொரோனா தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த டெல்டா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் என மாறியுள்ளது.
இந்நிலையில் தற்போது வரை உலக அளவில் கொரோனவால் 185,822,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,017,198 பேர் இந்நோய் தொற்றால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் நிலையில் 170,077,521 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 77,719 ஆக உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்