தினமும் வரலாறு காண உச்சத்தை எட்டி வருகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை. அதன் படி இன்று தமிழக தலைநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையை விட முறையே 31 காசுகள் மற்றும் 9 காசுகள் அதிகரித்து விற்கப்படுகிறது.
மக்களின் மிக முக்கிய தேவையாக மாறிவிட்டது பெட்ரோல் மற்றும் டீசல். ஆனால் இந்த எரிபொருட்களின் விலை மிகுந்த உச்சத்தை அடைந்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிப்பு வாடகை வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் வாடகை என அனைத்து தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது ஒரு தொடர் சங்கிலி போல உயர்ந்து கடைசியில் இந்த விலை ஏற்றம் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற பொருட்களில் பிரதிபலிக்கிறது.
எனவே மக்கள் இந்த விலை ஏற்றத்தை கண்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் எப்போது குறையும் என்று ஏக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. ஆனால் தினசரி விலை அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.37க்கும் மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இது நேற்றைய விலையை விட பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 31காசுகள் மற்றும் 9காசுகள் அதிகரித்து விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்