இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா – 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!

0

இந்தியாவில் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வரும் கொரோனா நோய்த்தொற்று தற்போது புதிய உச்சமாக ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,60,960 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,97,267 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,293 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் மினி ஊரடங்கு?? பிரதமர் இன்று ஆலோசனை!!

இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 29,78,709 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரே நாளில் மட்டும் மருத்துவமனையில் 96,505 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here