சேது தொலைந்ததற்கு சிவாவின் அப்பாவை கைது செய்யும் இன்ஸ்பெக்டர் – விறுவிறுப்பாகும் “இதயத்தை திருடாதே”!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று சிவாவின் அப்பா தாட்சியினியை சென்று மிரட்டி விட்டு வருகிறார். அதே போல் இன்ஸ்பெக்டர் வெற்றி சிவாவின் அப்பா நீலகண்டனை போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து வைத்து கொடுமைபடுத்துகிறார்.

“இதயத்தை திருடாதே” சீரியல்

இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “இதயத்தை திருடாதே” சீரியலில் சிவா, சஹானா மற்றும் சேது மூவரும் காணாமல் போய் விடுகின்றனர். சிவா மற்றும் சஹானா இருவரும் காணாமல் போனதற்கு தாட்சயினி தான் காரணம் என்று சிவா குடும்பத்தினர் நினைக்கின்றனர். அதே போல் சேது காணாமல் போனதற்கு சிவா குடும்பம் தான் காரணம் என்று தாட்சயினி நினைக்கிறார்.

இந்தியாவில் மினி ஊரடங்கு?? பிரதமர் இன்று ஆலோசனை!!

இதனை அடுத்து சிவாவின் அப்பா தாட்சியினியின் வீட்டிற்கு சென்று தாட்சயினியை மிரட்டுகிறார். இதனால் கோபம் அடையும் தாட்சயினி அவரிடம் கொந்தளிக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கிறது. பின், தாட்சயினி ஐஸ்வர்யாவால் தான் இவ்வளவு பிரச்சனை என்று கூறுகிறார். இதனால் கோபம் அடையும் ஐஸ்வர்யா நன்றாக பேசி விடுகிறார். பின், சிவாவின் அப்பா நீலகண்டனை விசாரிக்க வேண்டும் என்று கூறி இன்ஸ்பெக்டர் வெற்றி அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சேதுவை கண்டுபிடிப்பதற்காக தாட்சயினி வெற்றிக்கு லஞ்சம் வழங்குகிறார். இதனை அடுத்து வெற்றி நீலகண்டனை மிகவும் கொடுமை செய்கிறார். பின், நீலகண்டனுக்கு ஜாமின் வழங்க கோரி வக்கீல் வருகின்றனர். அவர்கள் நீலகண்டனை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைத்து வந்து விடுகின்றனர். பின், பவானி அவரிடம் நடந்தவற்றை கேட்கிறார். சிவா, சஹானா மற்றும் சேது மூவரும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று அனவைரும் வேண்டி கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here