நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் மினி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மினி ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதே போல் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் தற்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் தட்டுப்படும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளால் மக்கள் தொடர்ந்து வேதனை அடைந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல கட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை குறைக்க பிரதமர் தொடர்ந்து மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைப்பது குறித்து பிரதமர் இன்று மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் நாட்டில் மினி ஊரடங்கு, ஆக்சிசன் தட்டுப்பாடு, தடுப்பூசி பணிகள், போன்றவற்றை குறித்து ஆலோசிக்கவுள்ளனர். இந்த கூட்டம் முடிந்த பின்பு இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.