சீனாவில் தொடங்கி தற்போது 25 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை 2,004 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
50 நாட்களில் 2004 பேர்..!
கொரோனா வைரஸின் தாக்கம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது. சீனாவின் ஹவான் நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ் இதுவரை 74,185 பேரை பாதித்துள்ளது. இந்த வைரஸினால் நேற்று மட்டும் 136 பேர் உயிர் இழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் புதிதாக 1749 பேரை நேற்று கோவிட் 19 தாக்கி உள்ளது.
கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள் – எப்போது பயன்பாட்டுக்கு வரும்??
கண்டுபிடித்தவரும், சிகிச்சை அளித்துவரும் பலி..!
இந்த வைரஸின் தாக்கத்தை முதல்முதலாக கண்டறிந்த டாக்டர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சீனாவில் 10 நாளில் கட்டப்பட்ட பிரம்மாண்ட மருத்துவமனையின் இயக்குனர் நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்த சம்பவம் அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்களை பயத்தில் ஆழ்த்தி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |