அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிலை வைத்து வழிபட்டு வருகிறார். இவர் நிறுவியுள்ள 6 அடி டிரம்ப் சிலையை அந்த கிராமமே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.
டிரம்ப் தீவிர பக்தர்..!
தெலுங்கானாவின் கோன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஷா கிருஷ்ணா என்பவர் தான் டிரம்ப்பிற்கு சிலை வைத்து தினமும் வழிபாடு செய்து வருகிறார்.
இவர் இந்திய – அமெரிக்க உறவு பலம் பெற வேண்டும் என்பதற்காகவும், டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவும் வாராவாரம் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். மேலும் இவர் எந்த வேலையைத் தொடங்கும் முன்பும் டிரம்ப்பின் படத்தை வழிபட்ட பின்பே தொடங்குகிறார்.
டிரம்ப் கிருஷ்ணா..!
இது குறித்துக் கூறிய கிருஷ்ணா, டிரம்ப் சிலையை 15 பேர் சேர்ந்து 30 நாட்களில் உருவாக்கினோம். டிரம்ப் எனக்கு கடவுள் போன்றவர். இந்தியா வரும் டிரம்ப்பை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசையை இந்திய அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். இவர் டிரம்ப் மீது வைத்துள்ள தீவிர பற்றினால் அவரை டிரம்ப் கிருஷ்ணா என்றே ஊர் மக்கள் அழைக்கின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |