நாட்டில் இதுவரை கொரோனா பெருந்தொற்று காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கொரோனா உறுதி:
உலகம் முழுவதும் அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,858 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில், நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,34,188 லிருந்து 4,45,39,046 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 4,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39 கோடியாக ஆக உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் இறந்து உள்ளனர். இந்த வகையில் இதுவரை 5,28,355 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,922 லிருந்து 48,027 ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் 216.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.