மூத்திர மாநிலங்கள் என பேசிய  திமுக எம்பி., மக்களவையில் மன்னிப்பு கூறி விளக்கம்!!!., 

0
 மூத்திர மாநிலங்கள் என பேசிய  திமுக எம்பி.
இந்தியாவின் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக 3 வட மாநிலங்களில் வெற்றி வாகை சூடி இருந்தது. இதை பற்றி திமுக எம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம் நடந்த மக்களவை கூட்டத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது பாஜக அரசு ”பசு மூத்திரம் மாநிலங்கள்” என்று அழைக்கப்படும் ஹிந்தி பேசும் சில வட மாநிலங்களில் மட்டுமே தனது வெற்றியை நிலை நாட்டி உள்ளது என கூறியுள்ளார்.
இப்படி திமுக எம்பி செந்தில்குமார் பேசியதற்கு பாஜக துணைத் தலைவர் நாராயணன் தனது எதிர்ப்பை  தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று நடந்த மக்களவை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் செந்தில்குமார்  மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் குறித்து பேசுகையில் நான் ஒரு தவறான வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணவர்வை பாதித்திருந்தால் என்னை மன்னித்து விடவும். மேலும் நான் பேசிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்  என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here