தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் விடுமுறை தாண்டி, பள்ளி மாணவர்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளில் உள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 7) மற்றும் நாளை (டிசம்பர் 8) நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் மட்டும் டிசம்பர் 14 மற்றும் 22 தேதிகளுக்கு மாற்றப்பட்டன.
மற்றபடி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின் படி தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை என 11 நாட்கள் விடுமுறை காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.