முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்!!

0
peela rajesh
peela rajesh

தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் செயலாளரான பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

சொத்துக் குவிப்பு புகார்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் ஆரம்ப காலகட்டத்தில் தினமும் செய்தியாளர்கள் முன் தோன்றி புள்ளி விபரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து வந்தவர் பீலா ராஜேஷ். இதனால் தமிழக மக்களிடையே இவர் பிரபலம் அடைந்தார். மாலை நேரம் ஆகிவிட்டால் இவரது பேட்டிக்காக மக்கள் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தீடிரென இவர் பணிமாற்றம் செய்யப்பட்டு அந்த சுகாதாரத்துறை செயலாளராக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Peela Rajesh
Minister Vijayabaskar & Peela Rajesh

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிக்க வந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கட்டாய தனிமை!!

மற்றொரு துறைக்கு மாற்றப்பட்ட பீலா ராஜேஷ் பின்பு மாவட்ட சிறப்பு கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பணிமாற்றம் செய்யப்பட்டதில் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை, தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளது. தனது வருமானத்திற்கும் அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here