சரவணபவன் ஹோட்டல் சாம்பாரில் பல்லி – அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!

0

டெல்லி கொனாட் பிளேஸில் உள்ள சரவணபவன் ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சாம்பாரில் பல்லி:

புகார்தாரர் பங்கஜ் அகர்வால் டெல்லியின் ஆடம்பரமான கொனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சரவணபவன் உணவகத்திற்கு தனது நண்பர்களுடன் ஃபதேபூரியிலிருந்து வந்தபோது சாம்பார் கிண்ணத்தில் இறந்த பல்லியைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வீடியோவில், பல்லியின் பாதியை காணவில்லை என்று பங்கஜ் சுட்டிக்காட்டி உணவக ஊழியர்களை திட்டுகிறார். பாதி சாப்பிட்ட உணவுடன், அவர் மெனு கார்டையும் காட்டுகிறார் இது உணவகத்தின் பெயரை உறுதிப்படுத்துகிறது.

“முஹ் சே நிகலா ஹை யே கடி [இதை நான் என் வாயிலிருந்து எடுத்தேன்] … ஆதி கயாப் ஹை [பல்லியின் பாதி காணவில்லை],” என பங்கஜ் சொல்வதை இந்த வீடியோவில் கேட்கலாம்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு, உணவகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்துக்குவிப்பு புகார்!!

சி.சி.டி.வி காட்சிகளை உணவகத்தில் இருந்து கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமையல்காரரின் விவரங்கள், சாம்பார் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் மற்றும் உணவக உரிமம் ஆகியவை காவல்துறையினரால் கோரப்பட்டுள்ளன. சரவண பவன் உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றாகும், நாட்டில் 39 விற்பனை நிலையங்களும் வெளிநாடுகளில் 87 விற்பனையகங்களும் உள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here