வரும் டிசம்பர் 7 ஆம் தேதி கண்டிப்பாக கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் பெற்று தான் தமிழகத்திற்குள் வர வேண்டும் என்பதனையும் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு:
கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆன்லைன் வாயிலாக பாடங்களை கற்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் படி அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்பதும், தேர்வுகளை எழுதுவதுமாக உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளிக மற்றும் கல்லூரிகளை திறக்க மட்டும் அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்தியாவில் கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படி அனுமதி அளிக்கும் போது மாநில அரசுகள் மாநிலங்களில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு திறக்க அனுமதிக்கலாம் என்றும் கூறியிருந்தது.
8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!!
தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றே தமிழக அரசு கூறி வந்தது. ஆனால் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் நலன் கருதி வரும் 7 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. இதனை மீண்டும் முதல்வர் பழனிசாமி உறுதிபடுத்தியுள்ளார். ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உடலிட மாநிலங்களை தவிர்த்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இ பாஸ் முறை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.