விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வார இறுதிக்கு வந்துள்ளது. இந்நிலையில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பது ட்விஸ்ட்டாகவே உள்ளது. ஏனெனில் இந்த வாரம் பல முக்கியமான போட்டியாளர்களே களத்தில் உள்ளனர். தற்போது வெளியேறப் போகும் நபர் குறித்த விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
பிக் பாஸ் எவிக்சன்:
பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 60 நாளை கடந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் இத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருந்து மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை கேட்க அனைவரும் என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்தனர். முதலில் ரமேஷை அழைத்து கேட்டதில் என்ன சொல்வது என்றே திணறினார். இதிலிருந்து இந்த வீட்டில் உங்களது பங்களிப்பு என்ன என்பதில் புரிந்து கொண்டு இனி வரும் நாட்களில் நடந்து கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த வாரத்தில், ரம்யா பாண்டியன், அனிதா, பாலாஜி, சனம் ஆரி என பலரும் நாமினேஷனில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்பதால் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
நமீதாவை போல தளுக் மொலுக்குனு மாறிய கேபிரியலா!!
இதனை கணிப்பதும் சற்று கடினமாகவே உள்ளது. இந்நிலையில் அனிதாவின் கணவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது மிஸ் யூ, விரைவில் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார். இதனால் அனிதா வெளியேறுவாரோ?? என்றும் தகவல்கள் வைரலாகிறது.
தற்போது பிக் பாஸ் வட்டாரத்தில் இருந்து ஒரு எலிமினேஷன் பற்றி செய்திகள் கசிந்துள்ளது. இந்த வாரத்தில் சனம் மற்றும் அனிதா கடைசி இடத்தில் இருப்பதாகவும், சனம் தான் அதில் வெளியேறுவதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் சனம் சீக்ரட் ரூமில் வைக்கப்பட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.